திண்டுக்கல்: கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் 120 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். தொழிலதிபர் ராமாராவ் (60) ஆந்திரா சென்ற நிலையில் அவரது நிலத்தை பாதுகாக்குமாறு விஜயகுமார் என்பவரிடம் கூறியுள்ளார். ராமாராவின் நிலத்தை விஜயகுமார், அவரது நண்பர்கள் அபகரித்து அதில் விவசாயம் செய்து வந்துள்ளனர். விஜயகுமார் மற்றும் அவரது நண்பர்கள் மீது ராமாராவ் புகார் அளித்த நிலையில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
The post கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் 120 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயன்ற 3 பேர் கைது..!! appeared first on Dinakaran.